துாண்டில் மீன் பிடிப்பில் ஆர்வம்
ஆர்.எஸ்.மங்கலம்: மாவட்டத்தில் கண்மாய், குளங்கள் ஓடைகள் வயல்வெளிகள் என ஆங்காங்கே தேங்கியுள்ள மழை நீரிலும், தாழ்வான பகுதிகளை நோக்கி செல்லும் தண்ணீரிலும் தற்போது மீன்கள் அதிகம் உற்பத்தியாகி வளர்ந்துள்ளன. ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய், தேசிய நெடுஞ்சாலை பகுதி ஓடைகள் பல்வேறு நீர் நிலைகளிலும் இளைஞர்கள் துாண்டில் மீன்பிடிப்பில் ஆர்வம் காட்டுகின்றனர்.