உலக அமைதி வேண்டி கஞ்சிக்கலய ஊர்வலம்
கமுதி '- கமுதியில் குண்டாறு எட்டுக்கண் பாலம் அருகேயுள்ள மேல்மருவத்துார் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில், உலக அமைதி வேண்டியும், மழைப்பெய்து விவசாயம் செழித்திட வேண்டி கஞ்சிகலயம் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் செல்வ விநாயகர் கோயிலில் இருந்து கமுதி பஸ் ஸ்டாண்ட், பேரூராட்சி அலுவலகம், கண்ணார்பட்டி உட்பட முக்கிய வீதிகளில் கஞ்சி கலயம், அக்னிச்சட்டி, முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்துக்கு வந்தனர். அங்கு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.