கலாம் பிறந்த நாள் விழாவில் அக்.,25ல் மாரத்தான் போட்டி
ராமநாதபுரம்: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் 94வது பிறந்த நாள் அக்.,15ல் நடந்தது. இதையடுத்து அக்.,25ல் (நாளை மறுநாள்) இரு பாலர்கள் பங்கேற்கும் மாரத்தான் போட்டி அரிச்சல் முனையில் துவங்கி ராமேஸ்வரம் அப்துல்கலாம் கலை-அறிவியல் கல்லுாரி வரை நடைபெற உள்ளது. 'ரன் டூ டிரீம்' என்ற தலைப்பில் ஆண்களுக்கு 10 கி.மீ., பெண்களுக்கு 5 கி.மீ., மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது. இதில் முதல் பரிசு ரூ.10ஆயிரம், 2ம் இடம் ரூ.7000, மூன்றாமிடம் ரூ.5000, டி சர்ட், பதக்கம், சான்றிதழ் இருபாலருக்கும் தனித்தனியாக வழங்கப்படும். 4 முதல் 10 இடங்களுக்குள் வருபவர்களுக்கு ரூ.1000 பரிசு வழங்கப்படும். பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் அக்.,25 காலை 5:30 மணிக்கு போட்டி துவங்கும் தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கு வர வேண்டும் என மாவட்ட விளையாட்டு, இளைஞர் நலன் அலுவலர் தினேஷ்குமார் தெரிவித்தார்.