முளைப்பாரி ஊர்வலம்
திருவாடானை: திருவாடானை பிடாரி அம்மன், கல்லுார் முத்துமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக இரு கோயில்களிலும் முளைப்பாரி ஊர்வலம், காவடி எடுத்தல், பூக்குழி இறங்குதல் நடந்தது. அன்னதானம், இரவில் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. விழாவை முன்னிட்டு கோயில்கள் வண்ணமின் விளக்குகளால் அலங்கரிக்கபட்டிருந்தது.