உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அம்மன் கோயில்களில் முளைப்பாரி உற்ஸவ விழா

அம்மன் கோயில்களில் முளைப்பாரி உற்ஸவ விழா

திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே களிமண்குண்டு ஊராட்சி குத்துக்கல்வலசை காந்தாரியம்மன் கோயிலில் முளைக்கொட்டு உற்ஸவ விழா நடந்தது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. நாள்தோறும் மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. நேற்று முன்தினம் இரவில் அக்னி சட்டி ஊர்வலம் நடந்தது.நேற்று மாலை சக்தி கரகம் முன்னே செல்ல ஏராளமானோர் மேளதாளங்கள் முழங்க சென்றனர். கோயில் முன்பு ஏராளமான பெண்கள் பொங்கலிட்டனர். மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் கலை நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை கோயில் விழா கமிட்டியாளர்கள் செய்திருந்தனர்.* வண்ணாங்குண்டு ஊராட்சி செல்வனுாரில் முளைப்பாரி உற்ஸவ விழா நடந்தது. இங்குள்ள முத்துமாரியம்மன் கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. நேற்று முன்தினம் சிறப்பு பூஜைக்கு பின் நேர்த்திக்கடன் பக்தர்களால் அக்னி சட்டி, வேல் காவடி உள்ளிட்டவைகளை எடுத்து வந்தனர்.நேற்று காலை சிறப்பு தீபாராதனை நடந்தது. மலர்களால் மூலவர் முத்துமாரி அம்மன் அலங்கரிக்கப்பட்டிருந்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை செல்வனுார் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.மாலையில் நடந்த முளைப்பாரி ஊர்வலத்தில் செல்வனுார் ஊருணிக்கு கொண்டு செல்லப்பட்டு பாரி கங்கை சேர்க்கும் நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை