மரக்கிளைகளால் இடையூறு
கீழக்கரை : கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலை ஓரங்களில் வளர்ந்துள்ள மரக்கிளைககளால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் இருந்து கடற்கரை செல்லும் வழியில் உள்ள மரங்கள் கனரக வாகனங்கள் மற்றும் அரசு டவுன் பஸ்களுக்கு இடையூறாக இருப்பதால் சேதமடைந்து வருகிறது. எனவே கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தினர் அரசு பஸ்கள் மற்றும் கனரக சுற்றுலா வாகனங்களுக்கு இடையூறாக உள்ள சாலையோர மரக்கிளையை அகற்றிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.