உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சேதமான கட்டடத்தில் ஊராட்சி அலுவலகம்

சேதமான கட்டடத்தில் ஊராட்சி அலுவலகம்

திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே சின்னாண்டி வலசை ஊராட்சி அலுவலகம் சேதமடைந்த கட்டடத்தில் செயல்படுவதால் அலுவலர்கள், மக்கள் விபத்து அச்சத்தில் உள்ளனர்.சின்னாண்டி வலசை ஊராட்சி அலுவலகம் 1990ல் கட்டப்பட்டு 10 ஆண்டுகளுக்கு முன்பு பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டது. சின்னாண்டி வலசை, புதுக்கோவில், குமராபுரம், சங்கன்வலசை, வில்லிவலசை, செட்டித்தோட்டம், தோரையன் வலசை, பருதி நிலம், மகுளி வலசை உள்ளிட்ட கிராமங்களில் இருந்து மக்கள் குடிநீர் வரி, சொத்து வரி செலுத்துவதற்காக ஊராட்சி அலுவலகத்திற்கு வருகின்றனர். சமீபத்தில் பெய்த மழையால் கட்டடத்தில் நீர்க்கசிவு ஏற்படுகிறது. இதனால் பணியாளர்கள்அச்சத்துடன் பணியாற்றுகின்றனர். அடிக்கடி சிமென்ட் பூச்சுக்கள் பெயர்ந்து விழுகிறது. சின்னாண்டி வலசை ஊராட்சி தலைவர் சஞ்சய் காந்தி கூறியதாவது: சேதமடைந்த கட்டடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டடம் அமைக்க வேண்டும். கிராம சபை கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருப்புல்லாணி யூனியன் அலுவலக அதிகாரிகளுக்கு மனு கொடுத்துள்ளேன் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி