மேலும் செய்திகள்
காவிரி கூட்டு குடிநீர் புனரமைப்பு பணி தொய்வு
19-Mar-2025
ராமநாதபுரம்: ராமநாதபுரம் சிறப்பு நிலை நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என 2023ல் அரசு அறிவித்தது. அதன் பிறகு சட்டசபை கூட்டத்தொடரில் பேசிய அமைச்சர் நேரு ராமநாதபுரம் மாநகராட்சியாக மாற்றப்படும் என மீண்டும் அறிவித்துள்ளார். எனவே இதுவும் வெறும் அறிவிப்புடன் நின்று விடாமல் அரசாணை வெளியிட்டு நடப்பாண்டில் அமல்படுத்த வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர். கடந்த 2023 சட்டசபை கூட்டத்தொடரில் விரைவில் ராமநாதபுரம் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தபடும் என அரசு அறிவித்தது. அதற்கான பூர்வாங்கப் பணியாக சுற்றியுள்ள ஊராட்சிகளை இணைக்கும் திட்டம் துவங்கிய நிலையில் அப்படியே உள்ளது. இந்நிலையில் மீண்டும் ராமநாதபுரம் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுகிறது என நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நேரு சட்டசபையில் தெரிவித்துள்ளார். இதனை ராமநாதபுரம் வர்த்தகர்கள், பொது மக்கள் வரவேற்றுள்ளனர். அதே சமயம் ராமநாதபுரத்தை சுற்றியுள்ள பட்டணம்காத்தான், சக்கரக்கோட்டை, சூரன்கோட்டை, பேராவூர், ஆர்.எஸ்.,மடை, அச்சுந்தன்வயல், புத்தேந்தல் ஆகிய ஊராட்சிகளை இணைத்து 10 கி.மீ., சுற்றளவில் 60 வார்டுகளாக வரையறை செய்ய வேண்டும்.இதனை மீண்டும் கிடப்பில் போட்டு விடாமல் நடப்பு ஆண்டில் செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், சுற்றியுள்ள ஊராட்சிகளில் இணைக்கப்படும் இடங்கள் குறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சிகள் மூலம் கருத்து கேட்பு நடந்துள்ளது. இதில் வேளாண் சார்ந்த பணிகள் இல்லாத இடங்களை இணைக்க கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இப்பணிகள் நடப்பு ஆண்டில் முடிந்துவிடும். ராமநாதபுரம் முன்னேற விளையும் மாவட்டமாக உள்ளதால் மாநகராட்சி அரசாணை வெளி வந்தால் ஐ.ஏ.எஸ்., முடித்த அதிகாரி ஒருவர் கமிஷனராக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்றனர்.
19-Mar-2025