உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மாணவிகளிடம் சில்மிஷம் செய்த தலைமை ஆசிரியர் மீது வழக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்

மாணவிகளிடம் சில்மிஷம் செய்த தலைமை ஆசிரியர் மீது வழக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்

திருவாடானை:தொண்டி அருகே பள்ளி மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் அவர்சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.ராமநாதபுரம்மாவட்டம் தொண்டி அருகே சோழகன்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆண்ட்ரூஸ் 55. இவர் கடந்த நான்கு ஆண்டுகளாக இப்பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.இதையடுத்து திருவாடானை மகளிர் போலீசார் ஆண்ட்ரூஸ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சின்னராஜூ விசாரணை செய்து ஆண்ட்ரூசை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி