உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடி அனுமன் கோயிலில் ராகவேந்திரர் ஜெயந்தி விழா

பரமக்குடி அனுமன் கோயிலில் ராகவேந்திரர் ஜெயந்தி விழா

பரமக்குடி,: பரமக்குடி அனுமார் கோதண்ட ராமசாமி கோயிலில் ராகவேந்திர சுவாமிகளின் ஜெயந்தி விழா நடந்தது. கோயிலில் அனுமார் புனித புளி ஆஞ்சநேயராக வீற்றிருக்கிறார். இங்கு மகா மண்டபத்தில் ராகவேந்திர சுவாமிகள் சிலை உள்ளது. இவர் 16ம் நுாற்றாண்டில் வாழ்ந்த ஹிந்து மத மகான். வேங்கடநாதன் என்ற இயற்பெயர் கொண்ட இவர் பின்னாளில் ராகவேந்திரர் என்று அழைக்கப்பட்டார். வைணவ நெறியையும், மத்வர் நிறுவிய துவைத மதத்தையும் போதித்தவர். இவரது வாழ்நாளில் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தி, ஆந்திர மாநிலம் மந்த்ராலயத்தில் பிருந்தாவனம் எனுமிடத்தில் ஜீவசமாதியில் இருக்கிறார். இவரது திருஉருவச்சிலைக்கு நேற்று மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பின்னர் மாலையில் நடந்த பஜனை, ஆராதனைகளில் பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை