மேலும் செய்திகள்
ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேர் விடுவிப்பு
07-Dec-2024
ராமேஸ்வரம்:இலங்கை சிறையில் இருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரை நிபந்தனையுடன் மன்னார் நீதிமன்றம் விடுவித்து ரூ.2.03 லட்சம் அபராதம் விதித்தது.டிச.4ல் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் பிரிட்டோ, பெட்ரிக்நாதன் ஆகியோரது படகை சிறைபிடித்த இலங்கை கடற்படை வீரர்கள் 14 மீனவர்களை கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தனர். விசாரணை நாளான நேற்று மீனவர்கள் 14 பேரையும் போலீசார் பாதுகாப்புடன் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.இவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு இதனை 10 ஆண்டுகளுக்கு ஒத்தி வைத்து விடுதலை செய்வதாகவும், 10 ஆண்டுகளுக்குள் மீண்டும் எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்து கைதானால் இத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும், தலா ரூ.50 ஆயிரம் (இந்திய மதிப்பில் ரூ.14,500 வீதம் மொத்தம் 2 லட்சத்து 3000) அபராதம் செலுத்த வேண்டும். கட்டத் தவறினால் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டை ஒட்டி இன்று (டிச.20) காலை 11:00 மணி முதல் ஜன., 2 வரை இலங்கை நீதிமன்றத்திற்கு விடுமுறை. எனவே இன்று காலை 11:00 மணிக்குள் அபராத தொகையை செலுத்தி 14 பேரையும் விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமேஸ்வரம் மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
07-Dec-2024