உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வட்டார தொழில் நுட்ப அலுவலர்களுக்கு இரண்டு மாதங்களாக ஊதியம் இல்லை பொருளாதார நெருக்கடியால் தவிப்பு

வட்டார தொழில் நுட்ப அலுவலர்களுக்கு இரண்டு மாதங்களாக ஊதியம் இல்லை பொருளாதார நெருக்கடியால் தவிப்பு

பெருநாழி : கடந்த இரண்டு மாதங்களாக வேளாண் துறையில் உள்ள தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டப் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்காததால் வேதனை தெரிவித்தனர்.ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட வேளாண் உதவி இயக்குனர் அலுவலகங்கள் உள்ளன. இதில் 2009ல் உருவாக்கப்பட்ட வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அட்மா திட்டத்தில் களப்பணியாளர்கள் பணி செய்கின்றனர்.கடந்த 2012 முதல் திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு வட்டார தொழில் நுட்ப மேலாளர் மற்றும் உதவி தொழில் நுட்ப மேலாளர் மற்றும் மாவட்ட அளவில் கம்ப்யூட்டர் புரோகிராமர், கணக்காளர் உள்ளனர்.இவர்கள் கிராம அளவில் விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்ப பயிற்சி அளித்தல் மற்றும் புதிய நுணுக்கங்களை விவசாயிகளுக்கு நடைமுறைப்படுத்தி கருத்தரங்கம் மூலம் தெரியப்படுத்துதல். முன்னோடி விவசாயிகளை கொண்டு விவசாயத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை செய்கின்றனர்.மாவட்டத்தில் 11 ஒன்றியங்களிலும் உள்ள விவசாயிகளுக்கு அரசின் நலத்திட்டங்களை எடுத்துச் செல்லும் துாதுவர்களாகவும் உள்ளனர். இவர்களுக்கான நிதி மத்திய மாநில அரசுகளால் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. வேளாண் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் கூறியதாவது:ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் வட்டார தொழில் நுட்ப மேலாளர் மற்றும் உதவியை தொழில் நுட்ப மேலாளர்களுக்கு அக்., மற்றும் நவ., மாதம் சம்பளம் இதுவரை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. தொழில் நுட்ப மேலாளருக்கு ரூ.25 ஆயிரம், உதவி தொழில்நுட்ப மேலாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் வீதம் மாத சம்பளம் வழங்குகின்றனர்.குடும்பம் நடத்த பொருளாதார உதவிக்காக, கடன் வாங்கி தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது. அரசு உரிய முறையில் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை