மேலும் செய்திகள்
நீதிமன்ற உத்தரவு மீறல் நடவடிக்கை கோரி வழக்கு
22-Oct-2024
மதுரை: ராமநாதபுரம் மாவட்டம்தொண்டி கலந்தர் ஆசிக் அகமது. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:தொண்டி அருகே சோழியக்குடி கடலில் மீனவர்களுக்காக 'ஜெட்டி' பாலம் அமைக்கப்பட்டது. இதன் மூலம் மீனவர்கள் வலைகள் உள்ளிட்ட பொருட்களை படகுகளில் ஏற்றுவர். மீன்பிடித்து திரும்பி வந்து அவற்றை இறக்குவர். பாலம் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. சுற்றுலா பயணிகள் நிலை தடுமாறி பாலத்தின் ஓட்டை வழியாக விழுந்து காயமடைகின்றனர். சீரமைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள்ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு விசாரித்தது.அரசு வழக்கறிஞர்: ரூ.10 கோடியில் சீரமைக்க அரசின் ஒப்புதலுக்கு திட்ட அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.நீதிபதிகள்: ஓராண்டிற்குள்பாலத்தை சீரமைக்காவிடில் மனுதாரர் இந்நீதிமன்றத்தை நாடலாம். இவ்வாறு உத்தரவிட்டு முடித்து வைத்தனர்.
22-Oct-2024