உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / 10 ஆண்டுகளாக வழங்கப்படாத  அகவிலைப்படியை வழங்க  தீர்மானம் 

10 ஆண்டுகளாக வழங்கப்படாத  அகவிலைப்படியை வழங்க  தீர்மானம் 

ராமநாதபுரம்: கடந்த 10 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படி வழங்க வேண்டும் என அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் தீர்மானத்தில் வலியுறுத்தினர்.ராமநாதபுரம் சி.ஐ.டி.யு., அலுவலகத்தில் நடந்த போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் கிளை கூட்டத்திற்கு தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். செயலாளர் நாகராஜ் வரவேற்றார். ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு உடனடியாக பணப்பலன்களை வழங்க வேண்டும். நீதிமன்ற தீர்ப்பினை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும். அனைத்துத்துறை ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தினை போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு செயல்படுத்த வேண்டும்.10 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள அகவிலைப் படியினை உடனடியாக வழங்க வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. காரைக்குடி மண்டல துணை செயலாளர் மணிக்கண்ணு உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.--------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ