துாய்மை பணியாளர்களுக்கு மரியாதை
முதுகுளத்துார்: முதுகுளத்துார் ஒன்றியம் வெங்கலக்குறிச்சி ஊராட்சியில் பணி நிறைவு நாள் நிகழ்ச்சி நடந்தது.ஊராட்சி தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.ஒன்றிய கவுன்சிலர் கலைச்செல்வி முன்னிலை வகித்தார். அப்போது ஊராட்சித் தலைவர் பதவி ஏற்று 5 ஆண்டுகள் நிறைவுபெறும் நிலையில் பணிபுரிந்த துாய்மை பணியாளர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். ஊராட்சி செயலாளர் பொன்னுமணி, வார்டு உறுப்பினர்கள், மக்கள் பங்கேற்றனர்.