ஓய்வு சிறப்பு எஸ்.ஐ., பலி
பரமக்குடி : பரமக்குடி அருகே அரியனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற சிறப்பு எஸ்.ஐ., ராஜு 63. நேற்று காலை 11:30 மணிக்கு ராமநாதபுரம் இரு வழிச்சாலை நென்மேனி பகுதியில் டூவீலரில் சென்றார்.அப்போது திருவண்ணாமலையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற கார் ராஜு டூவீலர் மீது மோதியதில் சம்பவ இடத்தில் பலியானார். பரமக்குடி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.