ரோட்டோர பள்ளம் விபத்து அபாயம்
திருவாடானை: திருவாடானை அருகே பாகனுார் கிராமத்திற்கு செல்லும் ரோட்டோரம் ஆபத்தான பள்ளம் உள்ளது. குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டபட்ட இந்த பள்ளத்தை மூடாததால் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் டூவீலரில் செல்பவர்கள் விபத்தை சந்திக்கின்றனர். சிறிய வாகனங்களுக்கு வழிவிட்டு செல்லும் வாகன ஓட்டிகள் தங்கள் மீது மோதமால் இருக்க பள்ளம் ஓரமாக செல்வதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பள்ளத்தை மூட வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.