இலங்கையில் ரூ.6 லட்சம் பீடி இலைகள் பறிமுதல்: 3 பேர் கைது
ராமேஸ்வரம்: இலங்கை மன்னார் கடற்கரையில் அந்நாட்டு கடற்படையினர் ரோந்துசென்றனர். ஒரு பைபர் கிளாஸ் படகை சோதனையிட்டதில் 1211 கிலோ பீடி இலை மூடைகள் இருந்தன. இலங்கை கடத்தல்காரர்கள் 3 பேரை கைது செய்து மன்னார் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்த பீடி இலைகளின் இந்திய மதிப்பு ரூ.6 லட்சம். பீடி இலைகளை ராமநாதபுரம் கடலோர பகுதியில் இருந்து கடத்தல்காரர்கள் கடத்திச்சென்று இலங்கை கடத்தல்காரர்களிடம் ஒப்படைத்திருக்கலாம் சந்தேகிக்கப்படுகிறது. கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து உளவு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.