உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ரோட்டில்  ஓடும் கழிவுநீரால் பள்ளி  மாணவர்கள் பாதிப்பு

ரோட்டில்  ஓடும் கழிவுநீரால் பள்ளி  மாணவர்கள் பாதிப்பு

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் ரோட்டில் கழிவுநீர் ஓடுவதால் துர்நாற்றத்தால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.ராமநாதபுரம் பாலசுப்பிரமணியர் கோவில் தெருவில் பாதாள சாக்கடை பாரமிப்பின்றி அடைப்பு ஏற்பட்டு தினமும் கழிவுநீர் ரோட்டில் ஓடுவது வாடிக்கையாகியுள்ளது. இப்பகுதியில் பள்ளிகள் உள்ளதால் மாணவர்கள் ரோட்டில் நடந்து செல்வதற்கு சிரமப்படுகின்றனர். துர்நாற்றத்தால் நோய் தொற்று பரவ வாய்ப்பு உள்ளது. கழிவுநீரை ஊறிஞ்சி எடுப்பது, பிளிச்சீங் பவுடர் போடுவது என நகராட்சியின் நடவடிக்கை பெயரளவில் உள்ளது. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ