சஷ்டி பூஜை
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் முருகன் சன்னதி, தொண்டி அருகே நம்பு தாளை பாலமுருகன், ஆதியூர் முருகன் கோயில்களில் ஆவணி சஷ்டியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. வள்ளி, தெய்வானை யுடன் முருகன் மலர் மாலைகளால் அலங்கரிங்க பட்டிருந்தார். அதனை தொடர்ந்து நடந்த தீபாராதனையில் பக்தர்கள் கலந்து கொண்டு முருகன் பக்தி பாடல்களை பாடினர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.