சூறாவளியில் சிக்கிய கப்பல்: 2 மீனவர்கள் காயம்
ராமேஸ்வரம்: நடுக்கடலில் மீன்பிடித்த ராமேஸ்வரம் டல்வின்ராஜ் என்பவரது விசைப்படகு சூறாவளி காற்றில் சிக்கி கடலில் மூழ்கியது. இப்படகில் இருந்து 4 மீனவர்களில் இருவர் நீந்தி கச்சதீவில் தஞ்சம் அடைந்தனர். மற்ற இருவர் காணவில்லை. இதனால் ராமேஸ்வரம் மீனவர்கள் பதட்டத்தில் உள்ளனர்.