பவர் டில்லர் இயந்திரம் வாங்கவிவசாயிகளுக்கு மானியம்
ராமநாதபுரம்,: ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு வேளாண் பொறியியல் துறை சார்பில் பவர் டில்லர், விசை களையெடுக்கும் கருவிகள் வாங்கிட 50 சதவீதம் அரசு மானியம் வழங்கப்படுகிறது.வேளாண் பொறியியல் துறை சார்பில் 4000பவர் டில்லர்கள், விசைக் களையெடுக்கும் கருவிகள் வழங்கப்படுகிறது. தனிப்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர் பெற அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 20 ஆயிரம், விசை களையெடுப்பான்களுக்கு ரூ.63 ஆயிரம் அல்லது கருவியின் மொத்த விலையில் 50 சதவீதம் இவற்றில் எது குறைவோ அத்தொகை சிறு, குறு, ஆதிதிராவிடர்,பழங்குடியினர் மற்றும் பெண் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.முழு விபரங்களுக்கு ராமநாதபுரம், திருப்புல்லாணி, திருவாடானை, மண்டபம், ஆர்,எஸ்.மங்கலம் வட்டார விவசாயிகள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகம் கருவூலம் கட்டடத்தில் உள்ள வேளாண் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை 86102 03117 மற்றும் பரமக்குடி, நயினார் கோவில், முதுகுளத்துார், போகலுார், கமுதி, கடலாடி வட்டார விவசாயிகள் பரமக்குடி உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை 96553 04160 அலைபேசி எண்ணில் அல்லது அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மையங்களிலும் விண்ணப்பிக்கலாம்.