உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் ஆடி பூச்சொரிதல் விழா காப்பு கட்டுதலுடன் துவக்கம்

உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் ஆடி பூச்சொரிதல் விழா காப்பு கட்டுதலுடன் துவக்கம்

உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் ஆடி பூச்சொரிதல் விழா காப்பு கட்டுதலுடன் நேற்று காலை துவங்கியது.இதனை முன்னிட்டு மூலவர் வராகி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு 16 வகை சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடந்தது. கோயில் அர்ச்சகர் மூலவர் மற்றும் உற்ஸவமூர்த்திக்கு காப்பு கட்டினார். ஜூலை 18 முதல் ஆடி வெள்ளிக்கிழமையில் நேர்த்திக்கடன் பக்தர்களால் பால்குடம், அக்னி சட்டி உள்ளிட்டவைகள் நடக்கிறது.மாலை 6:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட உற்ஸவமூர்த்தி அம்பாளின் வீதி உலா புறப்பாடு நடக்கிறது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.காப்பு கட்டுதலை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை