ராமேஸ்வரத்தில் கடல் உள்வாங்கியது
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் அருகே கடல் உள்வாங்கியதால் பவளப்பாறைகள் தெரிந்தன.ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் இருந்து 200 மீ., துாரமுள்ள கடல் பகுதியில் நேற்று காலை திடீரென கடல்நீர் உள்வாங்கியது. கடலோரத்தில் பாசி படர்ந்த பவளப்பாறைகள் வெளியில் தெரிந்தன. கடலோரத்தில் வாழும் கடல் சிற்பிகள், நண்டுகள் கடல்நீர் இன்றி தத்தளித்தன.பின் மதியம் 2:00 மணிக்கு கடல்நீர் மட்டம் உயர்ந்ததும் கடற்கரை இயல்பு நிலைக்கு திரும்பியது. வடகிழக்கு பருவ சீசனில் வாடைக்காற்று வீசி வந்த நிலையில், தற்போது கிழக்கு திசையில் இருந்து கொண்டல் காற்று வீசுவதால் திடீரென கடல் உள்வாங்குவதும், பின் இயல்பு நிலைக்குத் திரும்பும். இது வழக்கம் தான் என மீனவர்கள் தெரிவித்தனர்.