உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / காரங்காடு கடலில் படகுசவாரி சுற்றுலா பயணிகள் உற்சாகம்

காரங்காடு கடலில் படகுசவாரி சுற்றுலா பயணிகள் உற்சாகம்

திருவாடானை : பள்ளி அரையாண்டு தேர்வு விடுமுறையால் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காரங்காடு சுற்றுலா மையத்தில் கடலில் படகு சவாரி செய்வதற்கு பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.காரங்காடு கடற்கரை சதுப்பு நிலக்காடுகளை உள்ளடக்கி அமைந்துள்ளது. இயற்கை தந்த கொடையாக அனைவருடைய மனதை கவரும் வகையில் மாங்குரோவ் காடுகள் அடர்த்தியாக உள்ளன. இப்பகுதி சுற்றுலா தலமாக அறிவிக்கபட்டதால் ஏராளமான பயணிகள் வருகின்றனர். அவர்களை அழைத்து கடலுக்குள் சென்று சுற்றி காட்டுவதற்காக வனத்துறையினர் சார்பில் படகு சவாரி, கயாக்கிங் எனப்படும் துடுப்பு சவாரி ஏற்பாடு செய்யபட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன் புயல் எச்சரிக்கையால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது. இந்நிலையில் பள்ளி அரையாண்டு தேர்வு விடுமுறையால் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.வனத்துறையினர் கூறியதாவது:ஆங்கிலப் புத்தாண்டு பிறக்க உள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளது. படகுகள் மற்றும் துடுப்புகள் தயார் நிலையில் வைக்கபட்டுள்ளது. குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ