மேலும் செய்திகள்
மானாமதுரையில் பொங்கல் பானைகள் தயார்
23-Dec-2024
ராமநாதபுரம் : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ராமநாதபுரத்தில் வெளியூர்களிலிருந்து மண் பானைகள் விற்பனைக்கு வந்துள்ளன. ராமநாதபுரம், சுற்றியுள்ள கிராமங்களில் ஆண்டுதோறும் பொங்கல் விழா கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகளுடன் கொண்டாடப்படுகிறது. பாரம்பரியமாக மண் பானையில் பொங்கலிடும் பழக்கம் உள்ளது. ஜன.,14ல் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மானாமதுரை, மதுரை உள்ளிட்ட ஊர்களிலிருந்து மண் பானைகள் வாங்கி வந்து வியாபாரிகள் விற்கின்றனர். கலர் மண் பானை ரூ.300, சாதாரண மண் பானை ரூ.200 முதல் ரூ.250 வரையும், வேலைப்பாடுகளுக்கு ஏற்றவாறு விற்கப்படுகிறது. மண் அள்ளுவதில் கட்டுப்பாடுகள் காரணமாக மண் பானைகள் வரத்து குறைந்துள்ளது. விலையும் கடந்த ஆண்டைவிட பானைக்கு ரூ.20 வரை உயர்ந்துள்ளது.பாரம்பரியமாக மண்பானையில் பொங்கலிடும் பழக்கம் கடந்த சில ஆண்டுகளாகவே குறைந்து வருவதால் சில்வர், வெண்கலம் பானைகள் ஆதிக்கம் காரணமாக மண் பானைகள் வாங்குவது குறைந்துள்ளது. இனிவரும் நாட்களில் பொங்கல் பானைகள் விற்பனை அதிகரிக்கும் என வியாபாரிகள் கூறினர்.
23-Dec-2024