மேலும் செய்திகள்
ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா விவசாயிகள் ஏமாற்றம்
01-Dec-2024
ஆர்.எஸ்.மங்கலம்:ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் அருகே வடவயல் கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் மகன் கார்த்திகேயன், 26, டிராக்டர் டிரைவர். இவர் நண்பரான அண்ணாமலை நகர் பொக்கார் மகன் பாலராம்கி, 32, என்பவருடன், ஊரில் இருந்து டூ - வீலரில் ஆர்.எஸ்.மங்கலம் சென்று விட்டு, காலை 9:30 மணிக்கு மீண்டும் ஊர் திரும்பிக்கொண்டிருந்தார். கார்த்திகேயன் டூ - வீலரை ஓட்டினார். திருச்சி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆர்.எஸ்.மங்கலம், களக்குடி விலக்கு அருகே வந்த போது, எதிரில் ராமேஸ்வரத்தில் இருந்து திருச்சி சென்ற அரசு பஸ், டூ - வீலர் மீது மோதியது.இதில் டூ - வீலருடன் இழுத்துச் செல்லப்பட்ட நண்பர்கள் இருவரும் சம்பவ இடத்தில் உடல் நசுங்கி பலியாயினர். பாலராம்கி இன்ஜினியரிங் படித்துள்ளார்; திருமணம் ஆகவில்லை. கார்த்திகேயனுக்கு, 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. தற்போது மனைவி ஜெயலட்சுமி, ஆறு மாத கர்ப்பிணியாக உள்ளார். அரியலுார் மாவட்டம் கள்ளாத்துாரை சேர்ந்த பஸ் டிரைவர் சிதம்பரம், 58, என்பவரை, ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
01-Dec-2024