மேலும் செய்திகள்
திருக்கோஷ்டியூரில் பூச்சொரிதல்
23-Apr-2025
கமுதி : கமுதி அருகே கொத்தகபூக்குளம் கிராமத்தில் முப்பிடாரி அம்மன், சித்தி விநாயகர், கருமேனி அம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழா நடந்தது.பக்தர்கள் காப்புகட்டி விரதம் இருந்து வந்தனர். விளக்கு பூஜை நடந்தது. கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.காப்பு கட்டிய பக்தர்கள் கிராமத்தின் முக்கிய வீதியில் பால்குடம் எடுத்து கோயிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.மூலவரான முப்பிடாரி அம்மன் உட்பட பரிவார தெய்வங்களுக்கு பால், சந்தனம், மஞ்சள் பொருட்களால் அபிஷேகம், தீபாராதனை நடந்தது.அன்னதானம் வழங்கப்பட்டது. சிறுவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
23-Apr-2025