மேலும் செய்திகள்
பெருமாள் கோயிலில் ஏகாதசி
8 hour(s) ago
அரசு கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
8 hour(s) ago
கோயிலில் 1008 சங்காபிேஷகம்
8 hour(s) ago
பரமக்குடியில் போலீசார் நல்லுறவு கூட்டம்
8 hour(s) ago
திருவாடானை : திருவாடானை அருகே கிணறு தோண்டும் போது மண் சரிந்து விழுந்தில் தொழிலாளி புதைந்து பலியானார்.ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எட்டுக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ் 64. இவரது தோட்டத்தில் நேற்று காலை கிணறு தோண்டும் பணி நடந்தது. அப்போது நிலமழகிய மங்கலம் கிராமத்தை சேர்ந்த வீரகுமார் 54, சித்தம்பூரணி அருளானந்து 38, இருவரும் கிணற்றில் இறங்கி மண்வெட்டியால் வெட்டி மணல் அள்ளினர்.அந்த மணலை சித்தம்பூரணி தாஸ் 45, ராஜ்குமார் 26, ஆகிய இருவரும் கூடையில் வாங்கி கிணற்றின் ஓரமாக கொட்டினர். அப்போது திடீரென மண் சரிந்து உள்ளே விழுந்தது. இதில் வீரக்குமார் மணலுக்குள் சிக்கி மூச்சுத்திணறி பலியானார். அருளானந்து காயமடைந்தார். திருவாடானை தீயணைப்பு நிலைய அலுவலர் வீரபாண்டியன் தலைமையில் வீரர்கள் மணல் அள்ளும் இயந்திரம் மூலம் மணலை அள்ளி வீரகுமார் உடலை மீட்டனர். வீரகுமாருக்கு மனைவியும், இரு மகன்களும் உள்ளனர். திருவாடானை போலீசார் விசாரிக்கின்றனர்.
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago