மேலும் செய்திகள்
கலை பண்பாட்டு துறை பயிற்சி முகாம் நிறைவு
04-Jan-2026
ராமநாதபுரம்: காஞ்சிபுரத்தில் ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில் நடந்த குளிர்கால பயிற்சி முகாமில் ராமநாதபுரத்தை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். கலை பண்பாட்டுத் துறையின் ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில் மாநில அளவிலான குளிர்கால பயிற்சி முகாம் காஞ்சிபுரம் மண்டல கலை பண்பாடு மைய வளாகத்தில் டிச.,25 முதல் ஜன.,3 வரை நடந்தது. தமிழகம் முழுவதும் இருந்து 9 முதல் 16 வயது வரை உள்ள மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர்களுக்கு சிலம்பம், பரதநாட்டியம், ஓவியம், கைவினைப் பொருட்கள், குரலிசை, கிராமிய நடனம் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில் மாணவர்கள் பவின், ஜெய்சுதன், கார்த்திகேயன், வருண், கவுதம் ஆகியோர் கைச்சிலம்பம் பயிற்சி பெற்றனர். இவர்களுக்கு காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி பரிசு, சான்றிதழ்கள் வழங்கினார். மண்டல உதவி இயக்குனர் கார்த்திகேயன், ராமநாதபுரம் மாவட்ட திட்ட அலுவலர் லோகசுப்பிரமணியன் பங்கேற்றனர்.
04-Jan-2026