ரூ.1.50 கோடி பெறலாம்
வேளாண் விளைப் பொருட்களை மதிப்பு கூட்டும் அலகுகளைஉருவாக்குவதன் மூலம் பதப்படுத்துவோர், நுகர்வோருடன் சந்தைஇணைப்புகள் மேம்படுத்தப்படுகிறது. இதன் மூலம் விவசாயிகள்லாபகரமான விலை பெறுவது உறுதி செய்யப்படும். இத்திட்டத்தின் கீழ்புதிய தொழில் முனைவோருக்கு நிதி ரூ.10 கோடி வரை வங்கி கடன் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. புதிய மதிப்பு கூட்டும் அலகுகளை நிறுவுவதற்கு முதலீட்டு மானியமாக 25 சதவீதம், பின்தங்கிய வட்டாரங்களில் தொழில் துவங்கும் பெண்கள்,ஆதிதிராவிடர் தொழில் முனைவோர்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் என அதிக பட்சமாக ரூ. 1 கோடியே 50 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். இந்த தொகையானது வேளாண் தொழில் முனைவோருக்குமுறையே 60, 40 சதவீதம் என இரு தவணைகளில் தொழில்முனைவோரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இது தவிர வங்கிகடனுக்கான 5 சதவீதம் வட்டி மானியம் 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். ராமநாதபுரம் மாவட்ட வேளாண் வணிகம் துணை இயக்குநர்கோபாலகிருஷ்ணன் கூறுகையில், திட்ட செலவு இயந்திரங்கள்,கட்டடங்களை உள்ளடக்கியது. மத்திய அரசின் கடன் உத்தரவாததிட்டத்தில் ரூ.2 கோடி வரை கடன் உத்தரவாதம் வழங்கப்படும்.மீதமுள்ள தொகைக்கு வங்கிகள் கோரியபடி ஈட்டுறுதி வழங்கவேண்டும். விண்ணப்பதாரருக்கு நிறுவனத்தின் உரிமை இருக்கவேண்டும். கூட்டாண்மை, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள்,கூட்டுறவு நிறுவனமாக இருக்கலாம். கூடுதல் விபரங்களுக்கு வேளாண்விற்பனை மற்றும் வணிகம் துணை இயக்குநர் அலுவலகத்தைதொடர்பு கொள்ளலாம் என்றார்.