மேலும் செய்திகள்
கூட்டுறவு சங்க 4 கிளை தொடக்கம்
11-Aug-2024
ஜலகண்டாபுரம்: சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே சூரப்பள்ளி, சோரை-யான்வளவை சேர்ந்தவர் சந்திரன், 90. இவர் வயது மூப்பால் இறந்ததால் நேற்று மதியம் அவரது வீட்டுக்கு உறவினர்கள் உள்-ளிட்டோர் வந்தனர். அப்போது பட்டாசு வெடிக்கப்பட்டது. அதில் இருந்து தீப்பொறி, துக்க வீட்டில் மொத்தமாக வைக்கப்-பட்ட பட்டாசு மூட்டையில் விழுந்தது. தொடர்ந்து மொத்த பட்-டாசுகளும் வெடித்து சிதறின. இதில் அருகே இருந்த, சோரை-யான்வளவு செல்வமணி, 50, செல்வராஜ், 44, தனபால், கண்ணன், 28, ரவி, 28, பூலாம்பட்டி செல்லம்மாள், 75, ஆகியோர் மீது பட்டாசு பட்டதில் காயம் அடைந்தனர். தொடர்ந்து ஜலகண்டாபும், சேலத்தில் உள்ள தனியார் மருத்துவ-மனைகளில் அனுமதிக்கப்பட்டனர். ஜலகண்டாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
11-Aug-2024