இளம் தலைமுறை நிர்வாகிகளைஉருவாக்குவதில் பா.ஜ., முன்னிலை
'இளம் தலைமுறை நிர்வாகிகளைஉருவாக்குவதில் பா.ஜ., முன்னிலை'ஓமலுார்:ஓமலுாரில், பா.ஜ., நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நேற்று நடந்தது. கிழக்கு ஒன்றிய தலைவர் சேதுபதி தலைமை வகித்தார். அதில் சேலம் மேற்கு மாவட்ட தலைவர் ஹரிராமன் பேசியதாவது: அமைப்பு ரீதியாக உருவான கட்சி பா.ஜ., இதை யாராலும் அழிக்க முடியாது. மோடி ஆட்சியால், 27 ஆண்டுகளுக்கு பின் டில்லியை பா.ஜ., கைப்பற்றியுள்ளது. இளம் தலைமுறை நிர்வாகிகளை உருவாக்குவதில் பா.ஜ., முன்னிலை வகிக்கிறது. வரும் சட்டசபை தேர்தலில் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் முதல்வரை உருவாக்குவோம். இவ்வாறு அவர் பேசினார்.முன்னாள் தலைவர் சவுந்தரராஜன், மாவட்ட துணைத்தலைவர் ரவி, மாவட்ட செயலர் விஜயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.