உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / புது ரக நெல் அறிமுகம்விவசாயிகளுக்கு அழைப்பு

புது ரக நெல் அறிமுகம்விவசாயிகளுக்கு அழைப்பு

புது ரக நெல் அறிமுகம்விவசாயிகளுக்கு அழைப்புவீரபாண்டி:வீரபாண்டி வட்டார வேளாண் துறை உதவி இயக்குனர் கார்த்திகாயினி அறிக்கை:தமிழ்நாடு வேளாண் பல்கலை, புதிதாக நெல் ஏ.டி.டீ., 56 ரகத்தை உற்பத்தி செய்து அறிமுகப்படுத்தியுள்ளது. இதை, 110 முதல், 115 நாட்களில் அறுவடை செய்ய முடியும். கார், குறுவை, சொர்ணவாரி, நவரை பருவங்களுக்கு ஏற்றது. கோ 51 ரகத்தை விட, 10 சதவீதம் அதிக மகசூல் கிடைக்கும். இது நடுத்தர சன்ன ரக அரிசி. முழு அரிசியை விட அதிக அரவை திறன் உடையது. நடுத்தர அளவில் அமைலோஸ் கொண்டது. குலை நோய், உறை கருகல், பாக்டீரியா இலை கருகல் நோய்களை மிதமாக எதிர்த்து வளரும் சக்தி கொண்டது. இலை சுருட்டுப்புழு, ஆணைக்கொம்பன் ஈ, புகையான், பச்சை தத்துப்பூச்சிகளை எதிர்க்கும் திறன் கொண்டது. விவசாயிகள் புது ரக நெல் ஏ.டி.டீ., 56 சாகுபடி செய்து பயன்பெற வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை