முன்னாள் படை வீரருக்கு 29ல் குறைதீர் கூட்டம்
முன்னாள் படை வீரருக்கு 29ல் குறைதீர் கூட்டம்சேலம், : சேலம் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், அவர்களது குடும்பத்தினர், படையில் பணிபுரிந்து வருவோரின் குடும்பத்தினருக்கான சிறப்பு குறைதீர் கூட்டம், ஜன., 29 மாலை, 4:30 மணிக்கு, கலெக்டர் அலுவலகத்தில் உள்ள குறைதீர் கூட்ட அரங்கில் நடக்க உள்ளது. இதில், முன்னாள் படைவீரர்கள், குடும்பத்தினர், கோரிக்கைகளை இரட்டை பிரதிகளில் விண்ணப்பம் வாயிலாக சமர்ப்பித்து பயன் பெறலாம் என, கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.