உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / முதல்வர் குறித்து கருத்துபதிவிட்டவர் கைது

முதல்வர் குறித்து கருத்துபதிவிட்டவர் கைது

முதல்வர் குறித்து கருத்துபதிவிட்டவர் கைதுசேலம்:சேலம், கோரிமேட்டை சேர்ந்தவர் கலியுக கண்ணன், 50. 'டுட்டோரியல்' நடத்தும் இவர், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கும் சிறப்பு பயிற்சி அளிக்கிறார். சமீபத்தில், 'எக்ஸ்' தளத்தில், அவரது பெயரில், மும்மொழி கல்வி ‍கொள்கைக்கு ஆதரவாகவும், தமிழக முதல்வர் குறித்து அவதுாறாகவும் கருத்து பதிவிட்டிருந்தார். இதை கண்காணித்த, சேலம் மாநகர போலீஸ் சோஷியல் மீடியா பிரிவு, சைபர் கிரைமில் அளித்த புகார்படி, நேற்று முன்தினம், கலியுக கண்ணன் மீது வழக்குப்பதிந்து, அவரை கைது செய்தனர். இதற்கு அவரது மகள் மைதிலி கண்டனம் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ