உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பூலித்தேவன் பிறந்தநாள் இ.பி.எஸ்., மரியாதை

பூலித்தேவன் பிறந்தநாள் இ.பி.எஸ்., மரியாதை

சேலம்: இந்திய விடுதலை போரில் ஆங்கிலேயருக்கு எதிராக, முதல் வீர முழக்கமிட்ட மாவீரன் பூலித்தேவனின், 309வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.அதையொட்டி சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில், பூலித்-தேவன் படத்துக்கு மாலை அணிவித்து மலர்துாவி, முன்னாள் முதல்வர், இ.பி.எஸ்., மரியாதை செலுத்தினார். 1857ல் நடந்த சிப்பாய் கலகத்துக்கு முன்பே, வெள்ளையனே வெளியேறு என, முதல்முறை வீர முழக்கமிட்ட பூலித்தேவனின் வீரத்தை போற்-றும்படி, அவரது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ