உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பறவை கணக்கெடுப்புஆர்வலருக்கு அழைப்பு

பறவை கணக்கெடுப்புஆர்வலருக்கு அழைப்பு

பறவை கணக்கெடுப்புஆர்வலருக்கு அழைப்புசேலம்,தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிந்த பின் ஆண்டுதோறும் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அதன்படி சேலம் வன கோட்டத்தில் சேர்வராயன் தெற்கு, வடக்கு, டேனிஷ்பேட்டை, மேட்டூர், ஏற்காடு, வாழப்பாடி ஆகிய வனச்சரகங்களில், வரும், 8, 9ல், நீர் பறவை கணக்கெடுப்பும், 15, 16ல், நில பறவை கணக்கெடுப்பும் நடக்க உள்ளது. இதில் வனத்துறையுடன் இணைந்து பறவை ஆர்வலர், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், இயற்கை ஆர்வலர் பங்கேற்கலாம். விருப்பம் உள்ளவர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள வனத்துறையினரை தொடர்பு கொள்ளவும். விபரம் பெற, 93451 32583, 97903 50295 என்ற எண்களில் அழைக்கலாம் என, மாவட்ட வன அலுவலர் காஷ்யப் ஷஷாங்க் ரவி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ