உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கடன் வாங்கி ரூ.1.85 லட்சம் மோசடி ஓட்டல் உரிமையாளர் மீது வழக்கு

கடன் வாங்கி ரூ.1.85 லட்சம் மோசடி ஓட்டல் உரிமையாளர் மீது வழக்கு

சேலம்: சேலம், வேடுகாத்தாம்பட்டி எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த பெரிய-நாதன் மனைவி மணிமேகலை, 45. இவர் கொண்டலாம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் நேற்று முன்தினம் அளித்த புகார் மனு:சிவதாபுரத்தில் உள்ள ஓட்டலில் பணிபுரிந்தேன். அந்த ஓட்டல் உரிமையாளர் சபரிநாதன், கடையை விரிவுபடுத்த, கடனாக, 2.80 லட்சம் ரூபாய் வாங்கினார். அதில், 95,000 ரூபாயை திருப்பி கொடுத்தார். மீதி, 1.85 லட்சம் ரூபாயை கேட்டபோது, தகாத வார்த்தையில் திட்டி மிரட்டல் விடுத்தார். அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும்.இவ்வாறு அதில் கூறியிருந்தார்.போலீசார், சபரிநாதன் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி