உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நிலத்தை ஆக்கிரமித்து கடைகள் எச்சரிக்கை பேனர் வைப்பு

நிலத்தை ஆக்கிரமித்து கடைகள் எச்சரிக்கை பேனர் வைப்பு

காடையாம்பட்டி: காடையாம்பட்டி தாலுகா, சின்னத்திருப்பதியில் துணை ஆரம்ப சுகாதார நிலையம் அருகே, மரக்கோட்டை கிராமத்துக்குரிய, அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. அதில், 2 சென்ட் நிலத்தில் அப்பகு-தியை சேர்ந்தவர்கள் ஆக்கிரமித்து, வணிக வளாகமாக மூன்று கடைகளை கட்டியுள்ளனர்.இப்பணி நடந்து கொண்டிருந்த போது, வருவாய்த் துறைக்கு சொந்தமான நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என, ஆக்ர-மிப்பாளர்களுக்கு காடையாம்பட்டி வருவாய் ஆய்வாளர் 'படிவம் - 7' வழங்கியுள்ளார்.ஆனால் உத்தரவை மீறி, தற்போது கடைகள் கட்டி முடிக்கப்-பட்டுள்ளது. இதையறித்த வருவாய்த்துறையினர், கடை முன், 'இந்த நிலம் வருவாய்த்துறைக்கு சொந்தமான அரசு புறம்போக்கு நிலம். இதில் தனிநபர் ஆக்கிரமிப்பு, கட்டுமான பணி மேற்-கொண்டால், காவல்துறை மூலம் குற்றவியல் நடவடிக்கை எடுக்-கப்படும்' என எச்சரிக்கை பேனர் வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ