போதையில் பணிஏட்டு சஸ்பெண்ட்
'போதை'யில் பணிஏட்டு 'சஸ்பெண்ட்'கெங்கவல்லி:ஆத்துாரை சேர்ந்தவர் சந்திரசேகரன், 55. கெங்கவல்லி போலீஸ் ஸ்டேஷனில், ஏட்டாக பணிபுரிகிறார். நேற்று முன்தினம், பணி நேரத்தில், 'போதை'யில் இருந்தார். இதுகுறித்த வீடியோ, சேலம் எஸ்.பி., கவுதம் கோயலுக்கு சென்றது.பின் ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார் விசாரணையில், போதையில் சந்திரசேகரன் இருந்தது உறுதியானது. இதனால் சந்திரசேகரனை, 'சஸ்பெண்ட்' செய்து, எஸ்.பி., நேற்று உத்தரவிட்டார்.