உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / புனுகு பூனை வேட்டை2 பேருக்கு காப்பு

புனுகு பூனை வேட்டை2 பேருக்கு காப்பு

புனுகு பூனை வேட்டை2 பேருக்கு 'காப்பு'ஓமலுார்:சேலம் மாவட்டம் டேனிஷ்பேட்டை வனச்சரகர் தங்கராஜ் தலைமையில் வனத்துறையினர், காடையாம்பட்டி, நாச்சனம்பட்டியில் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு வீட்டில், 3 பேர், புனுகு பூனை கறியை வெட்டிக்கொண்டிருந்தது தெரிந்தது. வனத்துறையினரை பார்த்ததும், அங்கிருந்து ஒருவர் தப்பி ஓடிவிட்டனர். மீதி, 2 பேரை பிடித்து விசாரித்ததில், பண்ணப்பட்டியை சேர்ந்த விஜயகுமார், 20, தர்மபுரி மாவட்டம் வேப்பிலை சசிகுமார், 30, என தெரிந்தது. இருவரையும் கைது செய்தனர். தப்பி ஓடியவர், நாச்சனம்பட்டி அருள், 27, என தெரிந்தது. அவரை, வனத்துறையினர் தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ