மேட்டூர் அணையில் இருந்து 49 டி.எம்.சி., உபரி நீர் திறப்பு
மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து, 11 நாட்களில், 49 டி.எம்.சி., உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.மேட்டூர் அணையில் இருந்து கடந்த, 2ல் வினாடிக்கு, 1.48 லட்சம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது. கடந்த, 14ல், 2,500 கனஅடி உபரி நீர், 16 கண் மதகு வழியாக வெளியேற்றப்பட்டது. அதாவது, 11 நாட்களில், 49டி.எம்.சி., உபரி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.கர்நாடகா அணைகளின் உபரி நீர்திறப்பு குறைந்ததால் நேற்று முன்தினம், 6,598 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வ-ரத்து, 4,284 கன அடியாக நேற்று சரிந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு, 12,000 கன அடி, கால்வாயில், 700 கன அடி நீர் திறக்கப்பட்டது. அணை நீர்மட்டம், 117.90 அடியாக இருந்தது. கடந்த ஆறு நாட்களில் அணை நீர்மட்டம், 3 அடி, நீர் இருப்பு, 3 டி.எம்.சி., குறைந்துள்ளது.