வலிப்பால் தாய், சேய் பலி
ஏற்காடு: ஏற்காடு, தலைச்சோலையை சேர்ந்தவர் தனுஷ்குமார், 23. கர்நா-டக மாநிலத்தில் தோட்ட வேலை செய்தபோது, அங்கு பணிபு-ரிந்த, திருவண்ணாமலையை சேர்ந்த அண்ணாமலை மகள் சந்-தியா, 19, என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சந்தியா, 7 மாத கர்ப்பமாக இருந்த நிலையில், கடந்த, 28ல் வலிப்பு வந்தது. உடனே அவரை, வாழவந்தி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு மருத்து-வர்கள் சோதனை செய்ததில், வயிற்றில் இருந்த பெண் குழந்தை இறந்த நிலையில் இருந்தது. இதனால் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து, இறந்த பெண் குழந்தையை எடுத்தனர். பின் சந்-தியாவுக்கு சிகிச்சை அளித்த நிலையில் நேற்று அதிகாலை மீண்டும் அவருக்கு வலிப்பு ஏற்பட்டதில் இறந்துவிட்டார். ஏற்-காடு போலீசார் விசாரிக்கின்றனர்.