மொபட் திருட்டு
சேலம், சேலம், மெய்யனுார் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் திருமலைவாசன், 32. இவர், 5 ரோட்டில் உள்ள ஜவுளிக்கடை முன், நேற்று மதியம், 'ஆக்டிவா' மொபட்டை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். சிறிது நேரத்துக்கு பின் வந்தபோது, மொபட்டை காணவில்லை. அவர் புகார்படி, பள்ளப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.