உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கவுரவ விரிவுரையாளர்கள்2ம் நாளாக ஆர்ப்பாட்டம்

கவுரவ விரிவுரையாளர்கள்2ம் நாளாக ஆர்ப்பாட்டம்

கவுரவ விரிவுரையாளர்கள்2ம் நாளாக ஆர்ப்பாட்டம்ஆத்துார்:ஆத்துார் அருகே வடசென்னிமலை அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லுாரியில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள், 2ம் நாளாக நேற்று, வாயில் முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தினர். கவுரவ விரிவுரையாளர் கூட்டமைப்பு நிர்வாகி முருகன் தலைமை வகித்தார். அதில் பணி நிரந்தரப்படுத்தல்; பணி பாதுகாப்புடன் இடமாறுதல் உள்பட, 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.இதுகுறித்து கவுரவ விரிவுரையாளர்கள் கூறுகையில், 'கோரிக்கையை ஏற்றுக்கொள்ளும் வரை தொடர் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை