உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாநகராட்சி ஊழியர் வீட்டில் 4 பவுன், ரூ.1.25 லட்சம் திருட்டு

மாநகராட்சி ஊழியர் வீட்டில் 4 பவுன், ரூ.1.25 லட்சம் திருட்டு

சேலம்: சேலம், கிச்சிப்பாளையம், வ.உ.சி., நகரை சேர்ந்தவர் துரைராஜ், 39. சேலம் மாநகராட்சி, 41வது வார்டு துாய்மை பணி மேற்பார்வையாளராக உள்ளார். இவர் கடந்த, 24 காலை, 11:00 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு வழக்கம்போல் ஜன்னலில் சாவியை வைத்துவிட்டு அருகே உள்ள கடைக்குச்சென்றார். சிறிது நேரத்தில் துரைராஜ் திரும்பி வந்து வீட்டை திறந்து உள்ளே சென்றார். அப்போது பீரோ திறந்திருந்தது. சந்தேகமடைந்த பார்த்தபோது, 1.25 லட்சம் ரூபாய், 4 பவுன் நகை திருடுபோனது தெரிந்தது. இதுகுறித்து துரைராஜ், நேற்று முன்தினம் அளித்த புகார்படி, கிச்சிப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'துரைராஜ், ஜன்னல் பகுதியில் சாவி வைப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். தொடர்ந்து விசாரிக்கிறோம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி