மேலும் செய்திகள்
மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்
09-Aug-2024
தாரமங்கலம்: சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே மல்லிக்குட்டை சென்றாய பெருமாள் கோவிலில் ஜெயந்தி ஜென்மாஷ்டமி விழா, கடந்த, 16ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜை நடந்து வருகிறது. நேற்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மாலை, 4:00 மணிக்கு தேரோட்டம் நடந்தது. சிறு தேரில் விநாயகர், பெரிய தேரில் ஸ்ரீதேவி, பூதேவி சுவாமிகளை எழுந்தருளச்செய்தனர்.தொடர்ந்து ஏராளமான பக்தர்கள், தேர்கள், மாரியம்மன் மகமேருவை வடம் பிடித்து இழுத்தனர். 'கோவிந்தா' கோஷம் முழங்க, முக்கிய வீதிகளில் இழுத்து செல்லப்பட்டு, கோவிலில் தேரோட்டம் நிறைவடைந்தது. தொடர்ந்து மாரியம்மன் கோவிலில் உறியடி உற்சவம், வழுக்கு மரம் ஏறுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று கருட வாகனத்தில் சுவாமி பவனி, மஞ்சள் நீராட்டு விழாவுடன் கோகுலாஷ்டமி நிறைவடைகிறது.
09-Aug-2024