மேலும் செய்திகள்
மழையால் 2 வீட்டின் சுவர் இடிந்து சேதம்
16-Oct-2024
சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த புழுதிக்குட்டை பகுதியில் உள்ள ஆனை மடுவு அணை மலைப் பகுதியில், நேற்று இரவு ஒரே நாளில் 15 செ.மீ மழை பெய்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 64.25 அடியாக உயர்ந்து, 236.79 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கி நிரம்பும் நிலையில் உள்ளது. இதனால் அணையில் தண்ணீர் எந்த நேரமும் திறந்துவிட படலாம் என, கரையோர மக்களுக்கு வருவாய் துறை மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆனை மடுவு அணை நிரம்பும் நிலையில் உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
16-Oct-2024