மேலும் செய்திகள்
தலைமறைவானவர் 9 ஆண்டுக்கு பின் கைது
05-Aug-2025
சேலம், சேலம் கே.பி.கரட்டை சேர்ந்தவர் ராமஜெயம், 39. திருட்டு வழக்கில் பள்ளப்பட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஜாமினில் வந்த அவர், விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தார். நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது. பள்ளப்பட்டி போலீசார் தேடி வந்த நிலையில், வீட்டுக்கு வந்த அவரை, நேற்று போலீசார் கைது செய்தனர். அதேபோல், களரம்பட்டியை சேர்ந்த தங்கபாலு, 27, திருட்டு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாததால், நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது. அவரும் நேற்று வீட்டுக்கு வந்த நிலையில், போலீசார் கைது செய்தனர்.
05-Aug-2025